Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோயிலில் வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு

tirupati
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரச்சித்தி பெற்றதால் இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி  சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும், இதற்காக ரூ.300 விலையிலான டிக்கெட் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி