Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு லட்டுக்கு மேல கிடையாது! – திருப்பதியில் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:02 IST)
திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர். இந்த பக்தர்களுக்கு பிரசாதமாக ஒரு லட்டு வழங்கப்படுவது வழக்கம். ஒரு லட்டுக்கு மேல் தேவை என்றால் அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டில் திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்தியது. அதன்படி 25 ரூபாய் சின்ன லட்டு 50 ரூபாய்க்கும், ரூ.100 பெரிய லட்டு ரூ.200க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனால் பக்தர்கள் தேவையான அளவு லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இதனால் பக்தர்கள் சிலர் உறவினர்களுக்கும் சேர்த்து நிறைய லட்டுகளை வாங்கி சென்றனர்.

லட்டு விற்பனையாகும் அளவிற்கு மீண்டும் தயாரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் லட்டுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளதால் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுடன் கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments