Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

Advertiesment
இந்தியர்கள்

Mahendran

, புதன், 4 ஜூன் 2025 (10:22 IST)
ஒரு மாதத்திற்கு முன்பு ஈரானில் மூன்று இந்தியர்கள் மாயமான நிலையில், அவர்கள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த மாதம் ஈரானுக்கு சென்ற நிலையில், அங்கு திடீரென மூவரும் காணாமல் போனார்கள். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய மூவரும் காணாமல் போனது குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்த நிலையில், ஈரான் நாட்டு காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகளும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
 
மூன்று பேரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பணம் கேட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது, ஒரு மாதத்திற்குப் பின்னர் மூன்று இந்தியர்களும் எந்த விதமான ஆபத்தும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், ஒரு மாதமாக அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!