Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

Advertiesment
Arrest

Mahendran

, வெள்ளி, 7 மார்ச் 2025 (18:47 IST)
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்தார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில், காலிஸ்தான் பயங்கரவாதிகளான ஜக்ரூப் சிங், சுக்ரீத் சிங், நவ் பிரீத் சிங் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜலந்தர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பயங்கரவாதிகள் ரகசியமாக பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, அவர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மூவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!