Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?

கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?
, வியாழன், 10 ஜூன் 2021 (07:29 IST)
கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பையும், அதிக பலியையும் ஏற்படுத்தி உள்ளது. 2வது அலையே இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் 3வது அலையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. 
 
ஆனால், இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்த அச்சத்தை போக்கியுள்ளார். 
 
இதேபோல மத்திய சுகாதார அமைச்சகமும் 3வது அலையில் கடுமையாக பாதிக்கப்படப் போவது சிறுவர்களும், குழந்தைகளும்தான் என்கின்றன தகவல்களை நம்ப வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திலும் 100-ஐ எட்டிய பெட்ரோல் விலை!