பாஜக பிரமுகர் மேல் கை வைத்தவர்கள் வீடுகள் தரைமட்டம்! – மத்திய பிரதேசத்தில் புல்டோசர் கலாச்சாரம்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:15 IST)
மத்திய பிரதேசத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை தாக்கிய 3 பேரின் வீடுகள் புல்டொசர் மூலமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.



சமீப காலமாக வட மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது புதிய கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த புல்டோசர் கலாச்சாரம் பரவியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால் போபால் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த 3 பேரின் வீடுகளும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல உஜ்ஜயினியில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்க்கப்பட்டிருந்தது. அதை மீறி செயல்பட்ட 10 இறைச்சி கடைகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments