Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

Advertiesment
தெலங்கானா

Mahendran

, சனி, 28 ஜூன் 2025 (12:17 IST)
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் யலால் கிராமத்தில் உள்ள மாவட்ட பரிஷத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உயிரியல் ஆசிரியை காசிம்பீ, வகுப்பறையில் பசுவின் மூளையை கொண்டு வந்து செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவம் வலதுசாரி அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பள்ளி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் ஆசிரியை காசிம்பீ மீது தெலங்கானா பசுவதை தடை மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ஆசிரியை கொண்டு வந்தது பசுவின் மூளையா என்பதை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியை தரப்பில் அது 'உபயோகமற்ற பொருள்' என்று கூறப்பட்டாலும், மாணவர்கள் அது பசுவின் மூளை என்று ஆசிரியை கூறியதாகவும், அதன் வாடை தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
ஆசிரியை அந்த மூளையுடன் மாணவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, பள்ளியின் மெசேஜிங் குழுவில் பதிவிட்டதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. வலதுசாரி அமைப்புகள் அந்த புகைப்படங்களை ஏந்தி தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!