Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகபட்ச வெப்பநிலை 41 - 44 டிகிரி செல்சியஸ் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Advertiesment
Heat

Mahendran

, வெள்ளி, 14 மார்ச் 2025 (19:09 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட புதிய முன்னறிவிப்பின்படி, தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த மூன்று நாட்களில் அடிலாபாத், குமுரம் பீம் ஆசிபாபாத், மஞ்செரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜக்தியால், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் பெத்தபள்ளி போன்ற பகுதிகளில் வெப்ப அலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 
மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடரும் எனவும், வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்த அளவுக்கு செல்லாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத், ரங்காரெட்டி, விகராபாத், மேட்சல்-மல்கஜ்கிரி, சங்கரெட்டி மற்றும் மேடக் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை ரயில் 25 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம்?