காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

Siva
புதன், 5 நவம்பர் 2025 (16:32 IST)
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஜுப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது, "காங்கிரஸ் இருந்தால் தான் முஸ்லிம்கள் இருப்பார்கள்... காங்கிரஸ் இல்லாமல் நீங்கள் இல்லை" என்று பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் மாநில அரசியலில் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளன.
 
சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை கவரும் நோக்குடன் முதலமைச்சர் பேசிய இந்த வரிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. முஸ்லிம் சமூகத்தினரிடையே பயத்தை பரப்ப முதலமைச்சர் முயற்சிப்பதாக வி.ஹெச்.பி. அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 
ஜுப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதி கணிசமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளது. இதனால், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இந்த இடைத்தேர்தல் ஒரு முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
 
ரேவந்த் ரெட்டியின் இந்தக் கருத்துக்கள், ஒருபுறம் காங்கிரஸின் முஸ்லிம் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும், மறுபுறம் பி.ஜே.பி. போன்ற கட்சிகளிடமிருந்து சிறுபான்மையினரை பாதுகாக்கக் காங்கிரஸ் மட்டுமே ஒரே அரண் என்ற செய்தியைப் பரப்புவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
ஆயினும், வி.ஹெச்.பி.யின் கடுமையான எதிர்வினையால், இந்த விவகாரம் தெலங்கானா மட்டுமின்றி தேசிய அளவிலும் ஒரு மதரீதியான விவாத பொருளாக மாறியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments