Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க 20 லட்ச ரூபாயை தீயில் எரித்த தாசில்தார்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:30 IST)
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க 20 லட்ச ரூபாயை தீயில் எரித்த தாசில்தார்!
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 20 லட்ச ரூபாயை தீயில் போட்டு எரித்த தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாசில்தார் கல்பேஷ் குமார் என்பவர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது. இதனையடுத்து அவரது வீட்டை சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததை தெரிந்து கொண்ட தாசில்தார் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பீரோவில் இருந்த ரூபாய் தாள்களை தீயில் எரித்தார்.
 
இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு ரூபாய் தாள்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சாம்பலாக்கிய பணம் 15 முதல் 20 லட்ச ரூபாய் இருக்கும் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி பணத்தை தீயில் எரித்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அந்த தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments