Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிவிப்பு கூட வெளியிடாமல் திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

Advertiesment
ஸ்விக்கி

Mahendran

, சனி, 16 ஆகஸ்ட் 2025 (10:32 IST)
இந்தியாவில் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, தனது பிளாட்பார்ம் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்விக்கி நிறுவனம், ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிளாட்பார்ம் கட்டணமாக வசூலித்து வருகிறது. இந்த தொகை முதலில் ரூ. 5 ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.12ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2 அதிகரித்து பிளாட்பார்ம் கட்டணம் ரூ.14 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வு குறித்து ஸ்விக்கி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கட்டண உயர்வு, பல வாடிக்கையாளர்களை மாற்றுத்தளங்களுக்குச் செல்ல தூண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி