Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி செல்போனில் விமான பணிப்பெண்கள் புகைப்படங்கள்: அதிர்ச்சி தகவல்..!

Mahendran
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (11:51 IST)
டெல்லியில், ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, என்கிற பார்த்தசாரதி, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மொபைல் போனை ஆராய்ந்ததில், பல பெண்களுடன் பேசிய ஆபாசமான உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
விசாரணையில், சாமியார் தனது மொபைலில் பல விமான பணிப்பெண்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் சேமித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு அவரது இரண்டு பெண் உதவியாளர்களும் உடந்தையாக இருந்ததால், அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
 
முன்னதாக, இவர் மாணவர்களை மிரட்டி, ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட 17-க்கும் மேற்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலங்களுக்கு பிறகு, கடந்த 50 நாட்களாக தலைமறைவாக இருந்த சைதன்யானந்த, இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
 
விசாரணையில் அவர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், உறுதியான ஆதாரங்களை காட்டும் போது மட்டுமே பதிலளிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தூதர் என்று போலியான விசிட்டிங் கார்டுகளையும் அவர் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனை பார்த்து தேர்வு எழுதிய ABVP பெண் நிர்வாகி..விடைத்தாளை பறிமுதல் செய்த கண்காணிப்பாளர்..!

திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மாயம்.. நகை மற்றும் பணத்துடன் தரகருடன் ஓடிப்போனாரா?

கரூர் 41 பேர் உயிரிழப்பு விவகாரம்! ஹேமமாலினி குழு தமிழகம் வந்தடைந்தது!

காந்தியடிகளின் பிறந்தநாளில் மதுவை ஒழிக்க தீர்மானம்! கிராமசபை கூட்டங்களுக்கு அன்புமணி வேண்டுகோள்!

தேர்தலில் மன்மோகன்சிங்கை தோற்கடித்த பாஜக பிரபலம் காலமானார்.. அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்..!

அடுத்த கட்டுரையில்