கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த FIR, கரூர் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.