Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ..? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!

இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ..? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்ற நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளது என்பதும் இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இப்போது மக்களவை தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பின் முடிவில் ஆச்சரியமாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.’
 
 டைம்ஸ் நவ் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி 160 முதல் 190 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.  
 
ஆட்சி அமைக்க  தேவையான இடங்களை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என்ற இந்த கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு 30 முதல் 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜக கூட்டணிக்கு நான்கு முதல் எட்டு தொகுதிகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.  
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. இன்றும் மழைக்கு வாய்ப்பு என தகவல்..!