Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணமா? வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்த உத்தரவு!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (11:23 IST)
இந்தியாவில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த வழிகாட்டு முறைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தனிநபர் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியப்படி ரூ.4 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளனர். அதேசமயம் கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்றும், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments