Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு: 5 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகள்!

supreme
, திங்கள், 7 நவம்பர் 2022 (11:41 IST)
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு மத்திய அரசு வழங்கியிருந்த நிலையில் அந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது
 
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் 3 பேர் தீர்ப்பளித்துள்ளனர் 
 
 
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகிய மூவர் தீர்ப்பளித்துள்ளனர் 
 
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தலைமை நீதிபதி லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். இந்த வழக்கில் அதிகபட்சமாக மூன்று பேர் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை