Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை எச்சரிக்கை

rain
, திங்கள், 7 நவம்பர் 2022 (10:55 IST)
தமிழ்நாட்டில் நவம்பர் 14ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பற்றி பார்த்து வருகிறோம்,
 
இந்த நிலையில் இலங்கையை அடுத்த தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கும் நிலையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்றும் குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 12 முதல் 14 வரை மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு