Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வுக்கு தடை வருமா? 7 மாநிலங்களின் சீராய்வு மனு இன்று விசாரணை

நீட் தேர்வுக்கு தடை வருமா? 7 மாநிலங்களின் சீராய்வு மனு இன்று விசாரணை
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:45 IST)
மருத்துவ நுழைவு படிப்புக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் காலத்தில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன
 
ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு இந்த தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்ததை அடுத்து இந்த தேர்வுக்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 13 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாநிலங்கள் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? நீட்தேர்வு தடை செய்யப்படுமா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பெரும் பரபரப்பு