Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகளுடன் பேச்சுவார்தை நடத்த குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளுடன் பேச்சுவார்தை நடத்த குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:12 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் ஒரு பக்கமும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு இன்னொரு பக்கமும் பிடிவாதமாக இருப்பதன் காரணமாகவும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே உள்ளது 
 
இந்த நிலையில் 49 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் ஒரு தோல்வியடைந்த தலைவர் - அர்னால்டு விமர்சனம்!