Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற மாதிரி தெரியவில்லை. களத்தில் இறங்கிய மனைவி சுனிதா..!

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:59 IST)
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதைக்கு ஜாமீனில் வருவது போல் தெரியவில்லை என்பதால் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் எப்போது வெளியே வருவார் என்று தெரியாத நிலை உள்ளது

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் அந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மற்றும் சுனிதா கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது

மேலும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments