Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலி செய்தியை பரப்பி பரபரப்பாக்கிய சசி தரூர் !

போலி செய்தியை பரப்பி பரபரப்பாக்கிய சசி தரூர் !
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:10 IST)
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என போலி செய்தி பரவியதால் பரபரப்பு. 

 
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். சுமித்ரா மகாஜன் மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், இது போலியான தகவல் என தெரியவந்துள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
பின்னர் தனது பழைய பதிவை நீக்கிவிட்டு, சுமித்ரா மகாஜன் இன்னும் நிறைய ஆயுலுடன் இருக்க வேண்டும் என சசி தரூர் கோரியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதஞ்சலி நிறுவனத்தில் பணியாற்றும் 83 பேருக்கு கொரோனா தொற்று