Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

Mahendran
வியாழன், 10 ஜூலை 2025 (15:30 IST)
தமிழகத்தை போலவே கேரளாவிலும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகின்றன. அதில் ஒரு கருத்துக்கணிப்பில், கேரள முதல்வராக சசி தரூருக்கு 35% மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதில் இருந்து தடுக்க காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் தான், தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில், சசி தரூருக்கு முதலமைச்சராக 35 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டோர் சசி தரூருக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், 18 முதல் 24 வயது உடையோரும் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சசி தரூரை அக்கட்சியின் தலைமை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
இந்த நிலையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்பு எடுத்ததில் மீண்டும் பினராயி விஜயனை முதல்வராக பார்க்க ஆர்வம் இல்லை என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments