Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை கடும் சரிவு

ஒரே நாளில் 6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை கடும் சரிவு
, திங்கள், 16 மார்ச் 2020 (19:06 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை மிக மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 40,000 க்கும் மேல் இருந்த சென்சாக்ஸ் தற்போது 30 ஆயிரத்திற்கு வந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பங்குச் சந்தை ஓரளவு ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 2700 புள்ளிகள் நிப்டி 700 புள்ளிகள் குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் 
 
இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 6 லட்சம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்பட கமாடிட்டி பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் துப்பாக்கியை தேடி ஓடும் பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்