Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (07:41 IST)
ஐந்து ஆண்டுகளாக தனது இரண்டு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் மற்றும் அவர்களது தாயின் வாக்குமூலங்களை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்த பின்னர், காவல்துறை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்தது. 
 
காவல்துறை துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "ஜூன் 20 அன்று, தாய் தனது இரண்டு மகள்களுக்கும் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரின் நிலையும் மோசமாக இருந்தது. இரு சிறுமிகளுக்கும் வயிற்று வலியும், மன அழுத்தமும் இருப்பதாக தாய் மருத்துவரிடம் கூறியுள்ளார். மருத்துவர் விசாரித்தபோது அந்த சிறுமிகளின் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மருத்துவர் தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
ஆனால் சிறுமிகளின் தாய் புகார் அளிக்க மறுத்ததாகவும், அவருக்கும் சிறுமிகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்  ஆலோசனை வழங்கியதாகவும், இந்த ஆலோசனை வழங்கும் நிகழ்வை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து முதல் தகவல் அறிக்கையை  காவல்துறை பதிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் சிறுமிகளுக்கு மருத்துவக் குழு மூலம் பரிசோதனை நடத்தப்பட்டதில் அந்த சிறுமிகளின் தந்தை  கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்