Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லும் 7 முதல்வர்கள் யார் யார்?

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லும் 7 முதல்வர்கள் யார் யார்?
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (20:53 IST)
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வை நடத்துவது என உறுதியாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே. மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் பாதிக்காதவாறு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இருப்பினும் நீட் தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக 7 மாநில முதல்வர்கள் நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளனர்
 
இன்று மாலை 7 மாநில முதல்வர்கள் காணொளி மூலம் இது குறித்து ஆலோசனை செய்து உள்ளதாகவும் நாளை காலை சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மனு தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ள ஏழு மாணவர்கள் 7 மாநில முதல்வர்களின் பட்டியல்: 
 
1. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
 
2. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
 
3. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 
 
4. பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்
 
5. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
 
6. சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 
 
7.புதுவை முதல்வர் நாராயணசாமி 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்திகளுக்குப் பணம்... ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்