கொரோனா தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடக்கம்: சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (17:31 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது என்பதும் இந்தியா முழுவதும் 7000ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
தமிழகத்திற்கும் 10 லட்சம்  கொரோனா தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிறுவனம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு ஊசியை தயாரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments