Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘’நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்’- முதல்வர் நிதிஸ்குமாரை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (16:57 IST)
பீகார் முதல்வர் நிதிஸ்குமார் மற்றும் துணை முதல்வர்  தேஜஸ்வியை சந்திந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  ‘’நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது.  இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற  பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர்

இந்த  நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்றிருந்தார்.  அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி  உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட அவர் விரும்பம் தெரிவித்துள்ளளார்.

முதல்வர்  நிதிஸ்குமார்,  ஏற்கனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா உள்பட பல தேசிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பிற்குப் பின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,’’ இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சந்திப்பு நடத்தியுள்ளோம். இதில், பல விஷயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.அதன்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும்  ஒன்றிணைத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில்   ஒற்றுமையுடன் போராட முடிவெடுத்துள்ளதாகக் ‘’கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலையும் மீறி இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை

தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஆளுனரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி திமுக பிரமுகரின் மனைவி.. விளம்பர ஸ்டண்டா?

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது.. பெரும் பரபரப்பு..!

அதிமுகவில் இருந்து தங்கமணியும் விலகுகிறாரா? எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments