Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவினர்களை தாக்கினால் வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும்: சரோஜ் பாண்டே எச்சரிக்கை

பாஜகவினர்களை தாக்கினால் வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும்: சரோஜ் பாண்டே எச்சரிக்கை
, திங்கள், 16 அக்டோபர் 2017 (15:08 IST)
சமீபத்தில் கேரளாவில் பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வருவதால் மத்தியில் ஆளும் பாஜக கடும் ஆத்திரத்தில் உள்ளது என்பது அதன் நிர்வாகிகளின் எச்சரிக்கையில் இருந்து தெரியவருகிறது



 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் கேரள அரசையும் இடதுசாரிகளையும் எச்சரித்து வரும் நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ((Durg)) மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சரோஜ் பாண்டே பேசியபோது, 'பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த யாராவது கண்வைத்தால், அவர்களது வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும் என்று எச்சரித்தார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் எந்த மாநில அரசையும் கலைக்கும் அதிகாரம் பாஜகவுக்கு இருப்பதாகவும், ஆனாலும் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரோஜ் பாண்டேவின் சர்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மோசமான தாக்குதல்: சோமாலியாவில் 276 பேர் பலி; 300 பேர் காயம்!!