Publish Date: Tue, 10 Oct 2017 (15:39 IST)
Updated Date: Tue, 10 Oct 2017 (15:43 IST)
கேரளாவில் கடந்த வாரம் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் இயங்கும் ஆலயங்களில் 36 பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அம்மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் அட்சகர் பணியை துவங்கினார்.
யது கிருஷ்ணன் முதுநிலை சமஸ்கிருதம் படித்தவர். 15 வயது முதல் சில கோயில்களில் பூஜை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.