Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 5 March 2025
webdunia

இந்தியாவில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

Advertiesment
PM Modi
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:01 IST)
இந்தியா முழுவதில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதனத்துக்கு எதிராக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்  அவரது பேச்சு இந்தியா கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
விவேகானந்தர், லோக மானிய திலகர் ஆகியோர் அளித்த உத்வேகம் சனாதனம் என்றும் இந்தியா கூட்டணி அந்த சனாதனத்தை அழிக்க நினைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்திய கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் இந்தியாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறப்பு சான்றிதழை அடையாளமாகப் பயன்படுத்தலாம் - மத்திய அரசு