சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

Siva
ஞாயிறு, 16 நவம்பர் 2025 (09:14 IST)
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
 
அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதை அடுத்து, இன்று முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சபரிமலை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து தங்கள் தரிசன தேதி மற்றும் நேரத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments