Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

Siva
திங்கள், 3 மார்ச் 2025 (16:12 IST)
கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமாகி வருகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பிய பிரச்சினைக்கு எந்தவிதமான பதிலும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மிக முக்கியம் என்றும், அனைத்து மதங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போதைப் பொருட்கள் எங்கு இருந்து எப்படிப் பரவுகிறது என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக, நம் நாட்டின் இளைஞர்கள் போதைப் பொருளால் அதிகம் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments