Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்காயினுக்கு தடை; டிஜிட்டல் கரன்சி: அடுத்த ப்ளானுடன் ரிசர்வ் வங்கி...

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:10 IST)
இந்தியாவில் பிடகாயின் தடை செய்யப்படுவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளதாம். 
கிரிப்டோ கரன்சிகளுள் ஒன்றான பிட்காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பிட்காயின் பயன்படுத்தும் முறையில் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது. 
 
பிட்காயின் பயன்பாட்டால் நுகர்வோர் பாதுகாப்பு, சந்தை ஒருமைப்பாடு மற்றும் பண மோசடி ஆகியவை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
மேலும், இது தொடர்பாக பயனர்கள் மற்றும் வர்த்தகர்களை எச்சரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிரப்டோ கரன்சி வைத்திருப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
பிட்காயின் தடையோடு சேர்த்து, ரிசர்வ் வங்கிக்கென ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான செயல்முறையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments