Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:40 IST)
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்றும் தற்போதைய வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின்  ஆளுநர்   சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் உலகின் வளர்ச்சி என்ஜின் ஆக உருவாக இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்,

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 6.5 என உயர்ந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரித்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments