Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்க மாட்டாது- ஆம்னி உரிமையாளர்கள் சங்கம்

நாளை முதல்  ரூ.2000 நோட்டுகள் வாங்க மாட்டாது- ஆம்னி உரிமையாளர்கள் சங்கம்
, வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:24 IST)
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து  அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று  மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களிடம்  உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில். ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில். நாளை 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும்.பயணத்தையும். எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எஸ்,சுவாமிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்