Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் வங்கி நேரம் குறைப்பு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

நாளை முதல் வங்கி நேரம் குறைப்பு: எத்தனை மணி நேரம் தெரியுமா?
, ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:26 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வருவதாக அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக நேற்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
 
இந்த நிலையில் தற்போது வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யப்படும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது 
 
இதனால் பிற்பகலில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இதனை கணக்கில் கொண்டு 10 மணி முதல் 2 மணிக்குள் தங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொழிப்பெயர்ப்புக்கு தமிழ் தகுதியில்லையா? வைரமுத்து ஆவேசம்