Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?

மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:55 IST)
விழுப்புரத்தில் ஏடிஎம் ல் பாட்டிக்கு உதவி செய்வது போல அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஒரு பெண் திருடியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வடமலை என்ற பாட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்ப்பதற்காக ஏடிஎம் க்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்துக்கு மேல் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான பாட்டி போலிஸில் புகார் கொடுக்க அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ஏடிஎம் ல் பேலன்ஸ் செக் செய்துவிட்டு பாட்டியின் கார்டுக்கு பதில் வேறு கார்டை அந்த பெண் கொடுத்துவிட்டு பாட்டியின் கார்டை எடுத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!