Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகார் நபருக்கு கண்களுக்கு கீழ் வளரும் பல்.. மருத்துவ துறையில் மிக அரிது.. அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
பீகார்

Mahendran

, வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (17:01 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு, கண்களுக்கு கீழே உள்ள எலும்பில் பல் வளர்ந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவிக்குமார் என்ற அந்த நபர், முகம் வீங்கிய நிலையிலும், கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ரவிக்குமாருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின்போது, அவரது கண்களுக்கு கீழே உள்ள எலும்பில் ஒரு பல் வளர்ந்திருப்பதை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர். இத்தகைய நிலை மருத்துவத்துறையில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சிக்கலானதாகவும், பார்வைக்கு அச்சுறுத்தலாகவும் இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
 
பல மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் வெற்றிகரமாக அந்த பல்லை அகற்றினர். தற்போது ரவிக்குமார் நலமுடன் இருப்பதாகவும், அவரது பார்வை படிப்படியாக தெளிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அரிய மருத்துவ நிகழ்வு, உள்ளூர் மருத்துவர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி.. அமெரிக்கா எச்சரிக்கை..!