Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜினாமாவிற்கு முன் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்த ரமேஷ் ஜார்கிஹோளி !

ராஜினாமாவிற்கு முன் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்த ரமேஷ் ஜார்கிஹோளி !
, வியாழன், 4 மார்ச் 2021 (11:20 IST)
ரமேஷ் ஜார்கிஹோளி ராஜினாமா செய்யும் முன்பு, முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். 

 
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நீர்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் பல முறை பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.  
 
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சிடியை கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இந்த செய்தி நேற்று டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகி கடும் சர்ச்சைகளை அங்கு எழுப்பியுள்ளது.  
 
மெத்தை மீது அமைச்சரும் அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் இருவரின் செல்போன் உரையாடல்கள் ஆகியவை ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இவர் ராஜினாமா செய்யும் முன்பு, முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது தனது ராஜினாமாவிற்கு பிறகு நீர்ப்பாசனத்துறையை வேறு எந்த மந்திரிக்கும் ஒதுக்கக்கூடாது, அதை நீங்களே (எடியூரப்பா) வைத்துக்கொள்ள வேண்டும். 
 
அடுத்த முறை மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது எனது குடும்பத்தை சேர்ந்த சகோதரர் பாலச்சந்திர ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்கி நீர்ப்பாசனத்துறையை ஒதுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிக்கலாவின் நோக்கத்தை நாம் நிறைவேற்றுவோம்! – எல்.முருகன் பதில்!