Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?

பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?
, ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:40 IST)
ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் அல்லது பாராளுமன்றம் கூடும் நாள் ஓர் பிரச்சனை வெளியாகி கொண்டிருப்பது ஏன் என பாஜக பிரமுகர்  ராம சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பெகாசஸ் என்ற டெலிபோன் ஒட்டு கேட்கும் பிரச்சனை பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் தான் வெளியானது. அதேபோல் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படமும் பாராளுமன்றத்திற்கு கூட்டத்திற்கு முந்தைய நாள் தான் வெளியானது 
 
அதேபோல் தற்போது பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் தான்  மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த அநியாயம் குறித்து வெளியானது. மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தை பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதுவரை அந்த வீடியோ வெளியேறவில்லை?
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரே இதுவரை போலீஸில் சென்று ஒரு புகார் கூட கொடுக்காமல் மிகச் சரியாக பாராளுமன்றத்திற்கு முந்தைய நாள் பேட்டியளிப்பது ஏன்? இது குறித்து விசாரிக்க வேண்டும் 
 
இதில் அயல்நாட்டு சதியும் இருக்கிறது, பாராளுமன்றத்தை ஒரு பிரச்சனையின் மூலம் முடக்க வேண்டும் என்ற சதியும் இருக்கிறது என்று ராம சீனிவாசன் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைதாப்பேட்டை பெண் பழ வியாபாரி படுகொலை.. கொலையான பெண்ணின் தங்கை கைது..!