Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் நடக்குமா? அதிரடி தகவல்

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (09:00 IST)
நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை அடுத்து 18 இடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெற இருந்தது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து திடீரென ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ராஜ்யசபா தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை காரணமாக மாநிலங்களை தேர்தலை ஒத்தி வைத்து இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா குஜராத் ஜார்க்கண்ட் உள்பட 7 மாநிலங்களில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments