Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: பிளிப்கார்ட், அமேசான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது என்பதும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தியேட்டர்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் எதிரொலியாக அதிரடியாக ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
 
இதன்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் விற்பனைத்தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த ஆர்டர்களும் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனம் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை மட்டும் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யப்படும் என்றும் மற்ற பொருள்களின் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments