Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: பிளிப்கார்ட், அமேசான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது என்பதும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தியேட்டர்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் எதிரொலியாக அதிரடியாக ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
 
இதன்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் விற்பனைத்தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த ஆர்டர்களும் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனம் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை மட்டும் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யப்படும் என்றும் மற்ற பொருள்களின் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments