Publish Date: Sat, 20 Nov 2021 (23:06 IST)
Updated Date: Sat, 20 Nov 2021 (23:09 IST)
ராஜஸ்தான் மாநில அரசியலில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் இன்று அசோக் கெலாட் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் அம்மாநில அரசியலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் அசோக் கெலாட்டிற்கும் கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்து நடந்துள்ளது.
நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.