Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டமாக ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள்! – காஷ்மீர் அரசியலில் பரபரப்பு!

கூட்டமாக ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள்! – காஷ்மீர் அரசியலில் பரபரப்பு!
, வியாழன், 18 நவம்பர் 2021 (08:30 IST)
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக காஷ்மீர் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் ஆகியோர் மொத்தமாக தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மாநில கட்சி தலைவர் குலாம் அகமது மிர் தங்களை புறக்கணிப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தேர்தலில் காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு