Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:14 IST)
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவ்வப்போது பண பட்டுவாடா குறித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக ,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனைப்போட்டி இங்கு எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மன் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
 
பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து சோதனையை முடித்து விட்டு அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் பல இடங்களில் பாஜகவினர் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்கிறார்கள், ஆனால் தேர்தல் அதிகாரிகளும் டெல்லி போலீசாரும் அதை கண்டு கொள்வதில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பாஜக தலைமையின் உத்தரவின் அடிப்படையில் டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் வீட்டில் அதிகாரிகள் அத்துமீறி சோதனை நடத்தி வருகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments