Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:05 IST)
சென்னை ஈ சி ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய சம்பவத்தில் ஏற்கனவே ஒரு கல்லூரி மாணவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இதுவரை இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து இளைஞர்கள் அத்துமீறும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் காரில் இருந்த இளைஞர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு தாம்பரம் பகுதியில் காரை போலீசார் கைது செய்தனர்.
 
மேலும்தனியார் கல்லூரி மாணவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments