Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

அந்த பெண்ணை ஒரு மனுஷியாவே நீங்க மதிக்கலை! – ராகுல்காந்தி ஆவேசம்!

Advertiesment
National
, ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (09:51 IST)
ஹத்ராஸ் பெண் கொலை வழக்கில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தர பிரதேச போலீஸ் கூறியுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருடன் தொடர்பு இருந்ததாக பாஜக பிரமுகர்கள் சிலரும், அந்த பெண் வன்கொடுமை செய்யப்படவில்லை என காவல் அதிகாரிகளும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி ” தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் பெண்ணை அவர்கள் ஒரு மனிதராக கருதாததால் தான் யாருமே பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என முதல்வரும், காவல்துறையும் கூறி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!