Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுமுறை நாட்களில் சூடுபிடிக்கும் ஐபிஎல் சூதாட்டம்! – 8 பேர் கைது!

விடுமுறை நாட்களில் சூடுபிடிக்கும் ஐபிஎல் சூதாட்டம்! – 8 பேர் கைது!
, ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (08:30 IST)
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் இரு ஐபிஎல் போட்டிகள் நடந்த நிலையில் அதன்மீது சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. வார நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு போட்டி மட்டுமே நடக்கும் நிலையில் வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும் வாரயிறுதிகளில் அதிகரிக்கிறது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது பலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளில் சோதனை நடத்திய போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளதுடன், 3 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா 3.74 கோடி, குணமானோர் 2.8 கோடி!