Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி! – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!

Advertiesment
லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி! – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
, புதன், 6 அக்டோபர் 2021 (14:06 IST)
விவசாயிகள் இறந்த லக்கிம்பூர் பகுதிக்கு செல்ல ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து லக்கிம்பூர் செல்ல அனுமதி கேட்ட ராகுல்காந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி பகுதிக்கு செல்ல ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதியை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரேந்திர மோதியை இந்திய மில்லினியல் இளைஞர்கள் ஆதரிப்பது ஏன்?