ரஃபேல் குடுத்துட்டாங்க.. ஏவுகணையை மறந்துட்டாங்க! – நடவடிக்கை எடுக்க சிஏஜி அறிக்கை!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (13:35 IST)
பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில் அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் வாங்கப்பட்டுள்ள அதிநவீன ரஃபேல் ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான ஏவுகணைகள் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டிய எம்பிடிஏ நிறுவனம் இன்னமும் அதை வழங்காமல் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் விமானத்தில் பொருத்தும் ஏவுகணை ஆகியவை தொடர்பான உயர்தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு குழுவிற்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் நினைவூட்டல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தேஜஸ் விமானத்திற்கு எஞ்சின் தயாரிப்பு பணிக்கான தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இன்னமும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments